Posts

இல்லையா? அல்லையா?

அன்பரீர் வணக்கம், தமிழில் ஏராளமான குழப்பங்களுக்கு இடையில், எந்த இடத்தில் "இல்லை" பயன்படுத்த வேண்டும், எந்த இடத்தில் "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பது பலருக்கும் மிக முக்கியமான குழப்பமாக உள்ளது. நான் அவன் இல்லை. நான் மகான் அல்ல. இது போன்ற படங்களின் பெயர்களும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தும் பொழுது, நமக்கு மேலும் குழப்பங்கள் வரும். எங்கு "இல்லை" பயன்படுத்த வேண்டும், எங்கு "அல்ல" பயன்படுத்த வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காண்போம். தமிழில் எதிர்மறை இரண்டு வகைப்படும். 1) இல்லையாம் தன்மை 2) அல்லையாம் தன்மை இது அல்லது அது என்று கூறும் பொழுது அது அல்லையாம் தன்மை. -> substitution இது இல்லை என்று வரும் பொழுது இல்லையாம் தன்மை. -> absence இல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் கிடையாது. அதாவது இருதிணை, ஐம்பால், மூவிடத்துக்கும் பொது. எ.டு: இன்று, இல்லை அல்லையாம் தன்மைக்குத் திணை, பால், இடம் உண்டு. அன்று, அல்ல, அல்லன், அல்லர், அல்லேன், அல்லேம், அல்லை, அல்லீர் என்று திணைக்கு ஏற்றவாறு வரும். அது பசுவா? காளையா? அது பசுவே. காளை அன்று. -> இது அல்லையாம் ...

நான் பார்த்து வியந்த திருக்குறள் உரை

பொய்யா மொழியாம், உலகப் பொதுமறையாம், தெய்வ நூலாம்..! நம் மறை நூலிற்கோ ஏகப்பட்ட சிறப்புக்கள் ..! அச்சிறப்பினையெல்லம் எழுத த் தொடங்கினால் "ஒரு நாள் போதுமா..! அதை நான் எழுத இன்றொரு நாள் போதுமா..!" என்ற வண்ணம் பாடலாகப் பாடலாம்.   அதில் ஒரு சிறப்பு யாதெனில் ஏழே சீர்களில் தான் சொல்ல வந்த மொத்த க் கருத்தினையும் மிகவும் அழகாக, படிப்பவர் மனதைக் கவரும் வண்ணம் எடுத்துரைத்த நமது ஐயனின் ஆற்றலைக் கண்டு நெடு நாட்கள் வியந்ததுண்டு..!   இது நாள் வரையில் நான் பரிமேலழகர், மு.வ.,  பாவாணர், கலைஞர் போன்ற பல அறிஞர்கள் எழுதிய உரையைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். அண்மையில் நான் ஓர் உரையைப் பார்த்தேன். சட்டென்று பார்க்கும் பொழுது குறளுக்கும் அதன் உரைக்கும் வேறுபாடே தெரியவில்லை .   சற்று உற்று நோக்கினால், நமது ஐயன் ஒன்றே முக்கால் அடியில்   எப்படி க் குறள் எழுதியிருக்கிறாரோ, அதுபோல உரையும் சரியாக 7 சொற்களில் எழுதியிருக்கிறார் அந்த அறிஞர்.   அந்த அறிஞர், மூதறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள்.   வழக்கம் போல், நமது முதல் குறளின் உரையைப் படித்தேன்.   அகர முதல எழுத்தெல்லாம்...

ஏன் அவ்வாறு விளித்தாய் பாரதி?

எட்டயபுரத்தில் பிறந்து தனது கவிதைகளாலும், பாட்டுக்களாலும் , கட்டுரைகளாலும் மக்கள் மனத்தில் விடுதலை உணர்வை விதைத்தவர் பாரதி. "ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்" என்று விடுதலை அடைவதற்கு முன்னே உரக்கப் பாடியவர். அன்று முதல் இன்று வரை பாரதியின் படைப்புக்களைப் படித்தால் நமக்குள் எழும் உணர்வு ஒரு தனி சுகம். இருந்தும் பலருக்குப் பாரதியின் மேல் சில வருத்தங்கள் உண்டு. ஏன் எனக்கும் சில வருத்தங்கள் இருந்தன. " யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்" , என்று கூறிய பாரதி ஒரு இடத்தில் "ஈனப் பறையர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஏன் இவ்வாறு எழுதியிருக்கிறார் என்று இவர் மேல் பல விமர்சனங்கள் உள. இப்பொழுது நாம் அதை விளக்கமாகப் பார்ப்போம்.

தும்முறது ஒரு குத்தமா?

Image
வணக்கம், இணையர்களுக்கிடையில் வரும் ஊடலுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம் . தும்மல் ஒரு காரணாமாக இருக்க முடியுமா? இவ்வினாவைக் கேட்டு நீங்கள் சற்று வியப்படையலாம். காதலிக்கும் ஒரு ஆண்மகனிடம் கேளுங்கள், அவன் கூறுவான் தம்மிடம் ஊடல் கொள்ள வேண்டும் என்று தனது காதலி முடிவு செய்துவிட்டால் தும்மல் என்ன, அவன் விடும் மூச்சுக் காற்றை வைத்துக் கூட ஊடல் கொள்வாள் என்பான்.   இதற்குச் சான்றாக இரு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.   நிகழ்ச்சி 1: தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டிருக்கும் ஒரு பொழுது அது . தலைவியை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் தலைவன் . அந்த நேரத்தில் அவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மலின் போது, ஒரு நொடிப் பொழுது நெஞ்சம் நின்று மீண்டும் துடிக்கும் என்பதால் ஒருவர் தும்மினால் 'நூறாண்டு வாழ்க', 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துக் கூறும் வழக்கம் உள்ளது.   தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கும் பொழுதில் தும்மல் வந்து விடவே, நம்மை வாழ்த்தும் பொழுதாவது தலைவி நம்மிடம் பேசுவாள் என்று ஆவலுடன் இருந்தான் தலைவன். தலைவன் எண்ணியவாறே தலைவியும் அவனை ...

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 5

Image
வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. வசந்த் அவர்கள் இயக்கத்தில் தேனிசைத் தென்றல்   தேவா அவர்களின் இசையமைப்பில் உருவான படம் 'நேருக்கு நேர்' . இது நடிகர் சூர்யாவின் அறிமுகத் திரைப்படம். நடிகர் விஜய், நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன், நடிகை கெளசல்யா என்று பெரிய நடிகர் பட்டாளமே நடித்த படம். இதில் வரும் பாடல்களுக்காகவே இப்படத்தின் பெயர்  காலங்கடந்து நிற்கும்.   தேனிசைத் தென்றல், கவிப்பேரரசு இணையில் அனைத்துப் பாடல்களும் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தாலும் இன்றும் நம் செவிகளுக்கு இன்ப விருந்தளிக்கும். இப்படத்தில் வரும் 'அவள் வருவாளா' பாடல்

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4

வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   2014 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. விஜய் அவர்கள் இயக்கத்தில், திரு. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த படம் 'சைவம்' . கடவுளின் பெயரால் உயிர்களை வதைக்க வேண்டாம் என்ற ஒரு வரியை அடித்தளமாக வைத்து ஒரு அழகிய படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.     ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் செல்வி . உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள பாடல் "அழகே அழகே எதுவும் அழகே". இப்பாடல்   திரு. நா. முத்துக்குமாரின்   படைப்புக்களில் மற்றும் ஒரு உன்னதமான படைப்பு என்றே கூறலாம். மிகவும் மென்மையான இசையில் அழகிய குரலோடு அமைந்திருக்கும் இப்பாடல், அன்று முதல் இன்று வரை நாம் அனைவரும் கேட்டு மகிழும் பாடலாக இருந்து வருகிறது. மேலும் இப்பாடல் வாயிலாக உத் ரா உன்னிகிருஷ்ணன் விருது(Film Fare) பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3

Image
வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு புறநானுற்றுப் பாடலுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான படம் 'இருவர்' . தமிழக அரசியலில் இரு துருவங்கள் என்று சொல்லக் கூடிய திரு. கருணாநிதி மற்றும் திரு. எம் . ஜி. இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கையை த் தழுவி இயக்குநரின் சிறு கற்பனையைத் தூவி மிகவும் துணிச்சலோடு எடுக்கப்பட்ட படமே இருவர்.