Posts

Showing posts from August, 2020

எழுத்துக்களா? எழுத்துகளா?

  வணக்கம், இதற்கு முன் எழுதிய கட்டுரையைச் சரி பார்க்கும் பொழுது எனக்கு ஏற்பட்ட பெரிய ஐயம்,   எழுத்துக்கள் சரியா? இல்லை எழுத்துகள் சரியா? அதைப் பற்றித் தேடலாம் என்று இணையத்தில் சிறிது நேரம் செலவிட்டேன். தெரியாத பல செய்திகளைத் தெரிந்துக் கொண்டேன். அதை உங்களின் பார்வைக்கும் வைக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் எழுதியதே இந்த க் கட்டுரை.   தமிழில் 'கள்' தவிர வேறு பல விகுதிகள் இருந்தாலும், 'கள்' விகுதி பெரும்பான்மையான இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 'கள்' என்பது பன்மை விகுதியாகும். இவ்விகுதி எவ்வாறு தமிழில் பயன்பாட்டுக்கு வந்தது, பின்பு அதன் வளர்ச்சி எவ்வாறு அமைந்திருந்தது என்பதைப் பற்றி இங்கு காணலாம்.

தேங்காய் சுடும் விழா

Image
ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காவிரி, அமராவதி உள்ளிட்ட பல ஆற்றங்கரையோரங்களில் தேங்காய் சுடும் விழாக் கொண்டாடப்படுகிறது.     சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் முக்கியமான மற்றும் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழா இந்த தேங்காய் சுடும் விழா . இவ்விழா சேலம் தவிர கரூர், மேட்டூர், ஈரோடு, நாமக்கல், பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம்,    பரமத்திவேலூர், திருச்செங்கோடு, இராசிபுரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடப்படுகிறது.

'ங'கரம் எங்கே?

நமது மொழியில் 247 எழுத்துக்கள் இருந்தாலும், நடைமுறையில் அனைத்து எழுத்துக்களையும் நாம் பயன்படுத்துவதில்லை . சில எழுத்துக்களை நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம். சில எழுத்துக்கள் நாம் சிறு வயதில் மொழியைக் கற்கும் பொழுது பார்த்திருப்போம், அதன் பின் அந்த எழுத்துக்கள் நமது கண்ணி ற்கு அகப்படாமலே போயிருக்கும். அதுப் போன்ற ஒரு எழுத்து வரிசையைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காணலாம்.   'ங'கரம், உயிர்மெய்யெழுத்துகளில் இரண்டாவது எழுத்து. இவ்வெழுத்தின் மெய்யெழுத்து மூலமான 'ங்', பல இடங்களில் பயன்பட்டிருப்பதை நாம் காணலாம்.   உயிர்மெய் எழுத்துக்களில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ என்னும் பத்து வரிசைகள், உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும். ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு வரிசைகள், சொல்லின் முதலில் வருவதில்லை.

முண்டகக்கண்ணி அம்மன்

அருள்மிகு திரு முண்டகக்கண்ணி அம்மன் துணை முண்டகக்கண்ணி அம்மன்னு சொல்றோமே,  அதென்ன முண்டகக்கண்ணி? அதற்கு என்ன பொருள்? முண்டகம் + கண்ணி = முண்டகக்கண்ணி முண்டகம் - தாமரை கண்ணன் - (அழகான) கண்ணை உடையவன் கண்ணி - (அழகான) கண்ணை உடையவள் தாமரை போன்ற அழகான கண் கொண்டவள் என்று பொருள். இணைந்திருக்க -  Instagram Handle

'நத்' என்னும் ஒரு அசை

ஒரு மொழியை உற்றுக் கவனித்து படிக்கத் தொடங்கும் பொழுது , அதிலிருந்து பல உன்னதமான தகவல்களை நாம் அறிய முடிகிறது. நிலத்தை அகழ்ந்து அதிலிருந்து பழைய வராலாற்றை நாம் தெரிந்து கொண்டிருக்கிறோம். " ஒரு சொல்லை அகழ்ந்து பார்த்தாலே, அந்தச் சொல் நமது பழைய வரலாற்றைச் சொல்லும்" என்று தேவநேயப் பாவாணர் கூறியிருக்கிறார்.   சொல்லை அகழ்ந்தே பழைய வரலாறுகளைச் சொல்லலாம் என்றால், அந்தச் சொற்களை நாம்  அகழ்ந்து ஆய்ந்து அதன் பொருளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். சொல்லின் ஒரு அசை ஏதேனும் ஒரு பொருளைத் தந்தால் அது பயன்படுத்தப்படும் மற்ற இடங்களிலும் அதற்கு நெருக்கமான பொருளையேத் தரும் .   'நத்' என்ற ஒரு அசையின் பின்னால் இருக்கும் பொருள் தொடர்பை இங்கு காணலாம்.