Posts

Showing posts from September, 2020

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3

Image
வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு புறநானுற்றுப் பாடலுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் உருவான படம் 'இருவர்' . தமிழக அரசியலில் இரு துருவங்கள் என்று சொல்லக் கூடிய திரு. கருணாநிதி மற்றும் திரு. எம் . ஜி. இராமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கையை த் தழுவி இயக்குநரின் சிறு கற்பனையைத் தூவி மிகவும் துணிச்சலோடு எடுக்கப்பட்ட படமே இருவர்.

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 2

Image
வணக்கம், சென்ற வாரம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 1 என்ற தலைப்பில், திருக்குறளில் சொன்ன அதே கருத்தை நமது திரைப்படப் பாடலிலும் சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம்.  அதே போல் இந்த வாரமும் ஒரு குறளையும், ஒரு பாடலையும் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர், பள்ளிப் பருவத்தில் செய்யுள் பகுதியில் திருக்குறளைப் படித்திருப்போம், சிலர் கடந்திருப்போம்.  நாம் அந்தக் குறளையெல்லாம் உற்று நோக்கினால் , அந்தக் குறள் அனைத்துமே அறத்துப்பால் அல்லது பொருட்பாலில் உள்ள குறளாகவே இருக்கும். அது ஏனோ தெரியவில்லை, காமத்துப்பாலில் இருந்து நாம் சற்று விலகியே இருந்திருக்கிறோம். அந்த 25 அதிகாரத்திலிருந்து நமக்கு ஒன்று அல்லது இரண்டு குறள் தெரிந்தாலே அது பெரும் வியப்புக்குரிய செய்தி தான். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகும் திரைப்படப் பாடலானது, காமத்துப்பாலில் உள்ள ஒரு குறளில் சொன்ன அதே கருத்தைச் சொல்லியிருக்கிறது.   இப்பொழுது நாம் பாடலுக்கு வருவோம்.

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 1

Image
நாள்தோறும் நமது செவிகளை ப் பல பாடல்கள் வருடி ச்   செல்கின்றன , அதில் சில பாடல்கள் அதன் இசைக்காகவும், வேறு சில பாடல்கள் அதன் வரிகளுக்காகவும், சில பாடல்கள் இரண்டிற்காகவும் நமது மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கின்றன .   பாடல்களை க் கவனிப்பதை வைத்து மனிதர்களை மூன்று வகையாக ப் பிரிக்கலாம்.   1) பெரும்பாலும் இ சையை க் கவனிப்பவர் 2) பெரும்பாலும் வரிகளை க் கவனிப்பவர் 3) மகிழ்ச்சியான தருணத்தில் இசையையும் , சோகமான தருணத்தில் வரிகளையும் கவனிப்பவர்   இதில் பெரும்பாலானோர் மூன்றாவது வகையைச் சேர்ந்தவராக இருப்பார்கள். நான் இரண்டாவது வகையைச் சே

நாவலந்தேயம்

இவ்வுலகில் ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களைக் கொண்ட சில நாடுகளில் நமது நாடும் ஒன்று. இந்தியா, பாரதம், ஹிந்துஸ்தான் போன்று பல பெயர்கள் நமது தாய் நாட்டிற்கு உள்ளது.  ஒவ்வொரு பெயர் உருவானதற்கு ஒரு காரணமும் அதன் பின் ஒரு வரலாறும் உண்டு. விஷ்ணு புராணத்தின்படி , பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் மூதாதையரான பரத மஹாராஜாவின் பெயரைத் தழுவி "பாரதவர்ஷம்" , "பாரதம்" என்ற பெயர் வந்தது. இ ரிக் வேதத்தின் படி "பாரதா" என்றப் பழங்குடியைச் சேர்ந்த "சுதாசா" என்ற மன்னன் "தசராஜ்னா" என்றப் போரில் வெற்றிப் பெற்ற பின் "பாரதம்" என்றப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள செய்திகளை வைத்துப் பார்க்கும் போது, இந்தப் பெயரைப் பெற்றதற்கான கால வரையறை கி.மு. 1 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று தெரிய வருகிறது.