Posts

Showing posts from October, 2020

தும்முறது ஒரு குத்தமா?

Image
வணக்கம், இணையர்களுக்கிடையில் வரும் ஊடலுக்கு எவ்வளவோ காரணம் இருக்கலாம் . தும்மல் ஒரு காரணாமாக இருக்க முடியுமா? இவ்வினாவைக் கேட்டு நீங்கள் சற்று வியப்படையலாம். காதலிக்கும் ஒரு ஆண்மகனிடம் கேளுங்கள், அவன் கூறுவான் தம்மிடம் ஊடல் கொள்ள வேண்டும் என்று தனது காதலி முடிவு செய்துவிட்டால் தும்மல் என்ன, அவன் விடும் மூச்சுக் காற்றை வைத்துக் கூட ஊடல் கொள்வாள் என்பான்.   இதற்குச் சான்றாக இரு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.   நிகழ்ச்சி 1: தலைவன் மீது தலைவி ஊடல் கொண்டிருக்கும் ஒரு பொழுது அது . தலைவியை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான் தலைவன் . அந்த நேரத்தில் அவனுக்குத் தும்மல் வந்துவிடுகிறது. தும்மலின் போது, ஒரு நொடிப் பொழுது நெஞ்சம் நின்று மீண்டும் துடிக்கும் என்பதால் ஒருவர் தும்மினால் 'நூறாண்டு வாழ்க', 'பல்லாண்டு வாழ்க' என்று வாழ்த்துக் கூறும் வழக்கம் உள்ளது.   தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கும் பொழுதில் தும்மல் வந்து விடவே, நம்மை வாழ்த்தும் பொழுதாவது தலைவி நம்மிடம் பேசுவாள் என்று ஆவலுடன் இருந்தான் தலைவன். தலைவன் எண்ணியவாறே தலைவியும் அவனை ...

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 5

Image
வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   1997 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. வசந்த் அவர்கள் இயக்கத்தில் தேனிசைத் தென்றல்   தேவா அவர்களின் இசையமைப்பில் உருவான படம் 'நேருக்கு நேர்' . இது நடிகர் சூர்யாவின் அறிமுகத் திரைப்படம். நடிகர் விஜய், நடிகர் சூர்யா, நடிகை சிம்ரன், நடிகை கெளசல்யா என்று பெரிய நடிகர் பட்டாளமே நடித்த படம். இதில் வரும் பாடல்களுக்காகவே இப்படத்தின் பெயர்  காலங்கடந்து நிற்கும்.   தேனிசைத் தென்றல், கவிப்பேரரசு இணையில் அனைத்துப் பாடல்களும் 20 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தாலும் இன்றும் நம் செவிகளுக்கு இன்ப விருந்தளிக்கும். இப்படத்தில் வரும் 'அவள் வருவாளா' பாடல்

தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 4

வணக்கம், தமிழ் இலக்கியமும் திரைப்படப் பாடலும் - 3 என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக, இக்கட்டுரையில் ஒரு திருக்குறளுக்கு இணையான கருத்தைச் சொல்லும் ஒரு திரைப்படப் பாடலைப் பார்க்கலாம்.   2014 ஆம் ஆண்டு இயக்குநர் திரு. விஜய் அவர்கள் இயக்கத்தில், திரு. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த படம் 'சைவம்' . கடவுளின் பெயரால் உயிர்களை வதைக்க வேண்டாம் என்ற ஒரு வரியை அடித்தளமாக வைத்து ஒரு அழகிய படம் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.     ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் செல்வி . உத்ரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ள பாடல் "அழகே அழகே எதுவும் அழகே". இப்பாடல்   திரு. நா. முத்துக்குமாரின்   படைப்புக்களில் மற்றும் ஒரு உன்னதமான படைப்பு என்றே கூறலாம். மிகவும் மென்மையான இசையில் அழகிய குரலோடு அமைந்திருக்கும் இப்பாடல், அன்று முதல் இன்று வரை நாம் அனைவரும் கேட்டு மகிழும் பாடலாக இருந்து வருகிறது. மேலும் இப்பாடல் வாயிலாக உத் ரா உன்னிகிருஷ்ணன் விருது(Film Fare) பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.