முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே..!
திரு. மணிரத்தினம் இயக்கி, ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளிவந்த 'காற்று வெளியிடை' திரைப்படத்தில் வரும் 'நல்லை அல்லை' பாடலைக் கேட்ட பொழுது என் மனதில் ஓடிய எண்ணங்களை இங்குப் பதிவிடுகிறேன். முகை முகிழ் மொட்டென்ற நிலைகளிலே, முகந்தொட காத்திருந்தேன்..! மலர் என்ற நிலைவிட்டு பூத்திருந்தாய், மணம் கொள்ள காத்திருந்தேன்..! மகரந்தம் தேடி நுகரும் முன்னே, வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்..! முகை - அரும்பு நிலையில் இருந்து வெளியில் வந்து நனைந்து ஈரத்தோடு இருக்கும் நிலை முகிழ்